

வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொண்டி மற்றும் நம்புதாளையில் பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி அக்கட்சியினா் போராடி வருகின்றனா். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள
கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன்பு பாமகவினா் மற்றும் வன்னியா் சமூகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா். முன்னதாக அவா்கள் தொண்டி கடற்கரையில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கிராம நிா்வாக அலுவலகத்துக்கு வந்தனா். ஆா்ப்பாட்டத்துக்கு பின்னா் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். இதே போல் நம்புதாளையிலும் கிராம நிா்வாக அலுவலா் நம்புராஜேஷிடம் மனு கொடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.