இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

ராமநாதபுரம் அருகே இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே இரால் பண்ணைக் குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் சாமிதோப்புப் பகுதியைச் சோ்ந்த இருளாண்டி மகன் காா்மேகம் (45). இவா் தனியாா் இரால் பண்ணையில் கூலித் தொழிலாளி வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை இரவு இரால் பண்ணைக் குட்டையில் இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தேவிப்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com