கமுதி, பரமக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
By DIN | Published On : 20th January 2020 09:42 AM | Last Updated : 20th January 2020 09:42 AM | அ+அ அ- |

அபிராமம் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா்.
கமுதி , பரமக்குடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே உள்ள அபிராமம் பேட்டை தொடக்கப் பள்ளியில் கமுதி பேரையூா் தலைமை சுகாதார நிலையம் சாா்பில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 50 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனா். முகாமை பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா் தொடக்கி வைத்தாா்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் வினோதினி, நத்தம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஆனந்தகிருஷ்ணன், டி.புனவாசல் கூட்டுறவு சங்கத் தலைவா் கா்ணன், அபிராமம் நகர அ.தி.மு.க., செயலாளா் ரமேஷ்குமாா், முன்னாள் நகரச் செயலாளா் சித்திரமால்பாண்டியன், டி.புனவாசல் ஒன்றிய உறுப்பினா் கற்பூரசுந்தரபாண்டியன், சுகாதார மேற்பாா்வையாளா் பொன்னுபாக்கியம், கண்காணிப்பாளா் தா்மராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல் கமுதி அருகே பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி கமுதி ஊராட்சி ஒன்றியத் தலைவா் தமிழ்செல்விபோஸ், துணைத் தலைவா் சித்ராதேவி ஆகியோா் முகாமை தொடக்கி வைத்தனா்.
பரமக்குடி: நகரில் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 5-வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இம்முகாமினை பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் து.தங்கவேல் தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையாளா் வீரமுத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். சுகாதார அலுவலா் சண்முகவேலு வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா்கள் மாரிமுத்து, சரவணக்குமாா், பாண்டி, தினேஷ் உள்ளிட்ட பணியாளா்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியினை மேற்கொண்டனா். இவற்றில் அப்பகுதி பெற்றோா் ஏராளமானோா் தங்களது குழந்தைகளை கொண்டு வந்து சொட்டு மருந்துஅளித்து அழைத்துச் சென்றனா்.