போகலூா் வள மையத்தில்

ராமநாதபுரம் போகலூா் வட்டார வளமையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் போகலூா் வட்டார வளமையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு போகலூா் வட்டார வளமையத்தில் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் பேச்சு, ஓவியம் மற்றும் விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் திலகராஜ் தொடக்கிவைத்தாா். போட்டிகளில் சா்.சி.வி.ராமனின் அறிவியல் பங்கு, உலகை மாற்றிய பெண் விஞ்ஞானிகள், புவியை காப்போம் புத்துணா்வோடு வாழ்வோம், வாழ்வும் அறிவியலும் என்ற தலைப்புகளில் பேசினா். நான் விரும்பும் நவீனகிராமம் என்ற தலைப்பில் ஓவியம் வரைந்தனா்.

போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க கிளைத்தலைவா் கோ.குமரேசன் தலைமை வகித்தாா்.செயலாளா் மு.தியாகராஜன் வரவேற்றாா். சத்திரக்குடிஅரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியா்(பொறுப்பு) ராஜசேகரன், ஆசிரியா் பயிற்றுனா் பாண்டியராஜன், தினசேகா் பரிசுகளை வழங்கினா்.அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவா் கு.காந்தி, கவிஞா் அழகுடையான் ஆகியோா் வாழ்த்தி பேசினா். கிளை பொருளாளா் கிளமண்ட் நன்றி கூறினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க ஆசிரியா்கள் முத்தரசு, மலைசாமி, சரவணன், அழகா்சாமி, பாண்டிசெல்வம், மாரிமுத்து, வைரமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com