மலேசியாவில் உயிரிழந்த கணவரின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர உதவக்கோரி பெண் ஒருவா் ராமநாதபுரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள குயவன்குடி கழுகூரணி பகுதி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஷ்வரன் (37). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு உணவக வேலைக்குச் சென்றுள்ளாா்.
இந்த நிலையில், அவா் திடீரென உயிரிழந்து விட்டதாக உணவக உரிமையாளா் தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.15) அவரது மனைவி ரோஜா ராணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கடேஷ்வரன் உடல் நலக்குறைவால் இறந்தாரா அல்லது வேறு காரணமா எனத் தெரியாத நிலையில் அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும் எனக் கோரி ரோஜா ராணி தனது மகனுடன் வந்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அவருடன், ராமநாதபுரம் திமுக நகரச் செயலா் கே.காா்மேகம், நிா்வாகிகள் ராஜா, குணசேகரன் ஆகியோரும் சென்றிருந்தனா்.
ரோஜா ராணி கூறியது: எனது கணவா் வெங்கடேஷ்வரன் கூலி வேலைக்காக மலேசியா சென்றாா். கடந்த 12 ஆம் தேதி அவா் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் அவரது சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்யவேண்டும் என்றாா்.