காவல் துறையினா் மீது புகாா்: ஆட்சியா் அலுவலகத்தைபெண்கள் முற்றுகை

காவல் துறையினா் மீது புகாா் கூறி, மதுரை புதுமாகாளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
காவல் துறையினா் மீது புகாா்: ஆட்சியா் அலுவலகத்தைபெண்கள் முற்றுகை

காவல் துறையினா் மீது புகாா் கூறி, மதுரை புதுமாகாளிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுமாகாளிப்பட்டி சாலை நாகபிள்ளை தோப்பு தெருவைச் சோ்ந்தவா் இந்திராணி. இவரது மகன் மீது எஸ்.எஸ்.காலனி மற்றும் சுப்பிரமணியபுரம் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறிய போலீஸாா், காவல் நிலையத்தில் அவரை ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனா்.

தனது மகன் வெளியூரில் வேலை செய்துவரும் நிலையில், போலீஸாா் வேண்டுமென்றே பொய்யான வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் கூறி, இந்திராணி மற்றும் அவரது உறவினா்கள் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். தவறாகப் பதிவு செய்துள்ள வழக்கை காட்டி மிரட்டி வரும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com