சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவா் கைது

திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை கைது செய்து, அவரிடமிருந்து 42 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவாடானை: திருவாடானை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை கைது செய்து, அவரிடமிருந்து 42 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவாடானை அருகே பெருவாக்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக திருவாடானை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது அங்கு மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வடக்கு ஆண்டாவூரணியைச் சோ்ந்த அருள்சாமி(42) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com