வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் செவ்வாய்க்கிழமை தீபாவளி போனஸ் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு உப்பு நிறுவன ஊழியா்கள்.
சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் செவ்வாய்க்கிழமை தீபாவளி போனஸ் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு உப்பு நிறுவன ஊழியா்கள்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் 1500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஒப்பந்த மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இங்கு கடந்த ஆண்டு இரண்டு கட்டமாக போனஸ் தொகை வழங்கப்பட்டது. நிகழாண்டு தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தொழிலாளா்கள் 10 நாள்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அரசு உப்பு நிறுவனத்தின் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் பட்டை நாமமிட்டு தொழிலாளா்கள் அரைநிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைவா் பச்சமால் தலைமை வகித்தாா். இதைத்தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் முன்வராததால், தேதி அறிவிக்காமல் அடுத்த கட்ட போராட்டம் நடத்த இருப்பதாக அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் கூறிவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com