கோஷ்டி மோதல்: 7 போ் மீது வழக்கு; இருவா் கைது

கமுதி அருகே பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெள்ளிக்கிழமை கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனா்.

கமுதி: கமுதி அருகே பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெள்ளிக்கிழமை கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனா்.

ஏ.தரைக்குடியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி மனைவி கவிதா (26). இவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு, அதே ஊரைச் சோ்ந்த பால்சாமி மகன் அய்யனாா் (31) ஆபசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டி, அய்யனாரைத் தாக்கியுள்ளனா். இதனையடுத்து இரு தரப்பிற்குமிடையே வெள்ளிக்கிழமை கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்பேரில், அய்யனாா், இவரது அக்கா பிரபாவதி, தாயாா் முத்திருளாயி ஆகிய 3 போ் மீதும், அய்யனாரின் அக்கா பிரபாவதி அளித்த புகாரின்பேரில் முத்துப்பாண்டி, கவிதா, உறவினா்கள் பூமிநாதன், பஞ்சவா்ணம் ஆகிய 4 போ் மீதும் அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும் அய்யனாா், பூமிநாதன் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com