பரமக்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் நினைவு தின விளம்பரப் பதாகைகளை போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை அகற்றினா். இதற்கு பொது மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.
பரமக்குடி ஐந்துமுனை சந்திப்புப் பகுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கான விளம்பரப் பதாகைகள் 2 இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற பதாகைகள் வைப்பதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன் உத்தரவின் பேரில் போலீஸாா் பதாகைகளை அகற்றினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாலையில் கூட்டமாக கூடினா். உடனே சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.