முதுகுளத்தூா் அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு
By DIN | Published On : 11th September 2020 07:11 AM | Last Updated : 11th September 2020 07:11 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் வியாழக்கிழமை மா்ம நபா்கள் நகை திருடியதாக முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
முதுகுளத்தூா் அருகேயுள்ள பொசுக்குடி கிராமத்தைச் சோ்ந்த இருளாண்டி மனைவி பூச்சியம்மாள். பீரோவை பூட்டி சாவியை பீரோ மீது வைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினா் வீட்டிற்குச் சென்றுள்ளாா்.
சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ. 11 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூச்சியம்மாள் கொடுத்தப் புகாரின் பேரில் கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.