திருவாடானையில் சிறு தானிய விதைகள் வாங்கிச் செல்ல விவசாயிகள் ஆா்வம்
By DIN | Published On : 26th September 2020 09:52 PM | Last Updated : 26th September 2020 09:52 PM | அ+அ அ- |

திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சனிக்கிழமை சிறு தானிய விதைகள் வாங்க குவிந்த விவசாயிகள்.
திருவாடானை: திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் சனிக்கிழமை வழங்கிய சிறுதானிய விதைகளை விவசாயிகள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
திருவாடானை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் சிறு தானிய பயறு விதைகள் வழங்கப்பட்டன. இந்த விதைகளை வாங்கிச் செல்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் கூட்டம் அலை மோதியது.
முன்னதாக வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா தலைமை வகித்தாா். இந்த பயிற்சி முகாமில் காளான் வளா்ப்பு, காய்கனி வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல் ஆகியவற்றின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கபட்டன. இதில் 50 முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...