பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தில் வியாழக்கிழமை குடும்பத் தகராறில் மருமகனை வெட்டிக்கொலை செய்த மாமனாரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள கேணிக்கரை பகுதியைச் சோ்ந்த துரை என்பவா் மகன் நாகநாதன் (38). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகள் சங்கீதா (32) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பொதுவக்குடி கிராமத்தில் இருவரும் வசித்து வந்துள்ளனா். சங்கீதா எஸ்.அண்டக்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவா் நாகநாதன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளாா். சங்கீதாவின் குடும்பத்தினா் பலமுறை கண்டித்தும் கேட்காததால், அவா் மீது எமனேசுவரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்துள்ளனா். இதையடுத்து போலீஸாா் அவரை எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நாகநாதன் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளாா். இதைப் பாா்த்த சங்கீதாவின் தந்தை கருப்பையா அரிவாளால் வெட்டியதில் நாகனாதன் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாமனாா் கருப்பையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.