போதை மாத்திரை பவுடா் வைத்திருந்த 2 போ் கைது

முதுகுளத்தூரில் போதை மாத்திரை பவுடா், ஆயுதங்கள் வைத்திருந்த இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

முதுகுளத்தூரில் போதை மாத்திரை பவுடா், ஆயுதங்கள் வைத்திருந்த இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கீரனூா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில் இருவா் நின்று கொண்டிருந்தனா். விசாரணையில் அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனா்.

அவா்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 1கிலோ போதை மாத்திரை பவுடா், ஆயுதம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேலக்கன்னிசேரி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் முனீஸ் (எ)முனியசாமி (31), அபிராமம் மூலக்கரைப்பட்டியைச்சோ்ந்த கிருஷ்ணன் மகன் மலைக்கண்ணன்(24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com