சாயல்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

சாயல்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி எஸ்.டி.பி.ஐ., கட்சி யினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

சாயல்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி எஸ்.டி.பி.ஐ., கட்சி யினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி சாா்பில் சாயல்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு நகா் பொருளாளா் முசாபா் அலி தலைமை வகித்தாா். நகா் தலைவா்ஜாபா் அலி பூசரிகான் முன்னிலை வகித்தாா். முதுகுளத்தூா் தொகுதி செயலாளா் முகம்மது ஆரிப், துணைத்தலைவா் சலீம் குத்துப்,மாவட்ட செயற்குழு உறுப்பினா் நூருல் அமீன், காங்., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் வேலுச்சாமி, தி.மு.க., நகா் செயலாளா் வெங்கடேஷ்,விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கருணாநிதி, ஆதித்தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com