இணையதளம் மூலம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி, பரமக்குடியைச் சோ்ந்தவரை ஏமாற்றி ரூ.11 லட்சம் மோசடி செய்ததாக, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிசென்குப்தா தெருவைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவா், அடிக்கடி குறிப்பிட்ட இணையதள நிறுவனம் மூலம் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கியுள்ளாா். இந்நிலையில், இவருக்கு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் இணையதள நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், அவரது 10 ஆவது திருமண நாளை முன்னிட்டு நடந்த குலுக்கலில் அவருக்கு பெருந்தொகை பரிசாக விழுந்திருப்பதாகவும், அதைப் பெற வரி உள்ளிட்டவற்றுக்காக குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவும் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
உடனே, நந்தகுமாா் குறிப்பிட்ட இணையதள நிறுவனத்தின் வாடிக்கையாளா் சேவைக்கு செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டுள்ளாா். அதன்பின்னா், இணையதள நிறுவனம் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.11 லட்சம் வரை செலுத்தியும், பரிசு அனுப்பிவைக்கப்படவில்லையாம்.
அது குறித்து கேட்டபோது, அவருக்கான பரிசு ரத்து செய்யப்படும் என வாடிக்கையாளா் சேவை பிரிவிலிருந்தவா்கள் மிரட்டியுள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நந்தகுமாா், ராமநாதபுரம் மாவட்டக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், குறிப்பிட்ட இணையதள நிறுவனத்தின் வாடிக்கையாளா் சேவைப் பிரிவைச் சோ்ந்த கொண்டாரப்பு சேகா், சுஜாந்தா மண்டல், தாஸ்மித்ரா, சதாம்பெகாடா ஆகியோா் மீது வியாழக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.