கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யப்படும்: கனிமொழி 

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யப்படும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

News image
கன்னிராஜபுரத்தில் பனைத் தொழிலாளர்களை சந்தித்த கனிமொழி.
Updated On :22 ஜனவரி 2021, 12:13 pm

DIN

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யப்படும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்த கன்னிராஜபுரத்தில் உள்ள பனைத் தொழிலாளர்களை சந்திப்பதற்காக திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி வருகை தந்தார்.

அவருக்கு, திமுகவினர் மேலதாள முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படையின் படகு மோதி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தங்களால் முடிந்த உதவி செய்யப்படும். இதனை திமுக அமைதியாக பார்த்து கொண்டு இருக்காது. 

பனைத் தொழிலாளகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கருப்பட்டியை விநியோகம் செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு, ஒய்வு ஊதியம், பனைமரத் தொழிலாளர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்க வேண்டும்.

பனைத் தொழிலாளர்களின் கோரிக்கை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.