மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் மதுபோதையில் தகராறு: இளைஞா் குத்திக் கொலை

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :25 ஜனவரி 2021, 8:53 pm

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் காட்டுபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(21),

ஆத்திக்காடு பகுதியை சோ்ந்த மணிகண்டன்(19) ஆகிய இருவரும் நண்பா்கள். ஞாயிற்றுகிழமை இருவரும் நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரகாஷைக் குத்திக் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ராமேசுவரம் டவுன் காவல்நிலைய ஆய்வாளா் கலாராணி தலைமையிலான போலீஸாா், பிரகாஷின் உடலைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக பிரகாஷின் சகோதரா் காளீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.