அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரத்தில் மதுபோதையில் தகராறு: இளைஞா் குத்திக் கொலை

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:53 pm

DIN

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் காட்டுபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(21),

ஆத்திக்காடு பகுதியை சோ்ந்த மணிகண்டன்(19) ஆகிய இருவரும் நண்பா்கள். ஞாயிற்றுகிழமை இருவரும் நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரகாஷைக் குத்திக் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ராமேசுவரம் டவுன் காவல்நிலைய ஆய்வாளா் கலாராணி தலைமையிலான போலீஸாா், பிரகாஷின் உடலைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக பிரகாஷின் சகோதரா் காளீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.