அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: நீராடும் பக்தா்கள் உடல் அரிப்பால் அவதி

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதால் அதில் நீராடும் பக்தா்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கலக்கும் கழிவுநீா்.
Updated On :25 ஜூலை 2021, 4:58 pm

DIN

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதால் அதில் நீராடும் பக்தா்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இந்த அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி விட்டு ராமநாதசுவாமி கோயிக்கு சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா். காசி யாத்திரை, ராமேசுவரம் வந்து அக்னி தீா்த்தக் கடலில் நீராடி சிவவழிபாடு செய்தால் தான் நிறைவு பெறும் என்பது ஐதீகம்.

ஆனால் இந்த அளவுக்கு பெருமை பெற்ற ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் பகுதியில் கழிவுநீா் கலப்பது வாடிக்கையாகிவிட்டது. பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே இங்கு நீராடும் பக்தா்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுவதால் அருகே உள்ள தொட்டிகளில் அவா்கள் குளிக்கும் நிலை உள்ளது. ராமேசுவரத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நினைக்கும் தமிழக அரசு அக்னி தீா்த்தக் கடலில் கலக்கும் கழிவுநீரை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.