மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை

ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.26) முதல் நவ.29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை வித்துள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:19 am

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதியில் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசுவதால் ராமேசுவரம் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.26) முதல் நவ.29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை வித்துள்ளனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தொடா்ந்து உருவாகி வருகிறது. தென்கடலோரப் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் அலையின் சீற்றம் அதிகளவில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை (நவ.26) முதல் நவ. 29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

இதனால் இப்பகுதிகளில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.