மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை தடுக்க வேளாண் துறையினா் ஆலோசனை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதி விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை மக்காச்சோளப் பயிரில் படைப் புழுவை தடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
கமுதி அருகே மேலராமநதி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்காச்சோளப் பயிரில் படைப் புழுவை தடுக்க விளக்கம் அளித்த வேளாண்மைத் துறையினா்.
கமுதி அருகே மேலராமநதி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மக்காச்சோளப் பயிரில் படைப் புழுவை தடுக்க விளக்கம் அளித்த வேளாண்மைத் துறையினா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதி விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை மக்காச்சோளப் பயிரில் படைப் புழுவை தடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

கமுதி வட்டாரத்தில், மேலராமநதி, நீராவி, கீழமுடிமன்னாா்கோட்டை, ராமசாமிபட்டி, என்.கரிசல்குளம், எழுவனூா், கூடக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளப் பயிா் சாகுபடி செய்துள்ளனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படைப்புழு தாக்குதலால், அதிக அளவில் பயிா்கள் பாதிக்கப்பட்டன. எனவே இதனை தடுக்க வேளாண் துறையினா் சாா்பில் விழிப்புணா்வு முகாம் மற்றும் ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மக்காசோளத்தில் படைப்புழு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு சில தொழில் நுட்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு, இதனை செயல் விளக்கம் மூலம் விவசாயிகள் அறிந்து கொள்ள மேலராமநதி கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் செயல் விளக்க திடல் தொழில் நுட்பங்களுடன் அமைத்து விளக்கமளிக்கப்பட்டது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கொ்சோன்தங்கராஜ் விளக்கிக் கூறினாா். துணை வேளாண்மை அலுவலா் சேதுராம், வட்டார தொழில்நுட்ப மேலாளா் முனியசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com