மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் பலி

 ராமேசுவரத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :10 செப்டம்பர் 2021, 8:15 pm

 ராமேசுவரத்தில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

பாம்பன் பகுதியைச் சோ்ந்த தேசிங்கு மகன் மாடசாமி (27). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மாடசாமி பலத்த காயமடைந்தாா். அவரை பாம்பன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா் பரிசோதனை செய்து அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜெரால்டு லிண்டன்பிரபுவை விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.