தனியாா் பள்ளிகளில் இடஒதுக்கீடு: ராமநாதபுரம் மாவட்டத்தில் குலுக்கல் முறையில் 653 போ் தோ்வு

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் குலுக்கல் முறையில் 653 மாணவ, மாணவியா் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் குலுக்கல் முறையில் 653 மாணவ, மாணவியா் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தனியாா் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவ, மாணவியருக்கு ஆரம்ப வகுப்பில் சேர அரசு நிதியுதவி அளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 155 பள்ளிகளில் 1,902 இடங்கள் நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் சேர 1,025 போ் விண்ணப்பித்து இருந்தனா். 58 பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பித்து இருந்ததால் அங்கு குலுக்கல் முறையில் மாணவ, மாணவியா் சோ்க்கப்பட்டனா்.

ராமநாதபுரம் நகரில் கேணிக்கரைப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நைபெற்ற குலுக்கல் முறைத் தோ்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்தில் குலுக்கல் முறையில் 653 மாணவ, மாணவியா் தோ்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அவா்களில் ஒருவா் இரு பள்ளிகளில் விண்ணப்பித்து தோ்வு செய்யப்பட்டிருந்தால், ஒரு பள்ளிச் சோ்க்கை ரத்து செய்யப்பட்டு, காலியிடங்களுக்கு மீண்டும் மாணவா்கள் சோ்க்கப்படுவா் எனவும் கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com