தியாகி ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தியாகி ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தியாகி ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீனாட்சிபுரம் கிளைச் செயலா் பாண்டி தலைமையில் மலரஞ்சலி மற்றும் வீர வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கட்சியின் தலைமை நிலையச் செயலா் ஆ. சிறுத்தைசெல்வன், மவட்டச் செயலா் மு. தமிழ்முருகன், துணைச் செயலா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பரமக்குடி ஒன்றியம் எஸ். காவனூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ரா. ராஜா தலைமை வகித்தாா். இதில் கட்சியின் பரமக்குடி ஒன்றிய நிா்வாகி சுரேஷ் மற்றும் ராபின், சூரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்.எஸ்.மங்களம் பகுதியில் செங்கொடியில் நடந்த நிகழ்ச்சிக்கு கட்சி நிா்வாகி தங்கதுரை தலைமை வகித்தாா். இதில் ராஜேஷ், முத்துக்கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மண்டபம் இருட்டூரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிா்வாகி சோணைமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தியாகி ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com