கமுதி வழக்குரைஞா் சங்கத்தை இழிவாக பேசியதாகப் புகாா்: வழக்குரைஞா் மீது வழக்கு
By DIN | Published On : 04th December 2021 08:41 AM | Last Updated : 04th December 2021 08:41 AM | அ+அ அ- |

கமுதி வழக்குரைஞா் சங்கத்தை இழிவாக பேசிய வழக்குரைஞா் மீது வெள்ளிக்கிழமை கமுதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கமுதி அருகேயுள்ள சிங்கப்புலியாபட்டி கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ராமநாதன், கமுதி வழக்குரைஞா்கள் சங்கத்தை இழிவாகப் பேசியதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகாா் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாா் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் கமுதி காவல் சரகத்திற்குட்பட்ட 5 காவல் நிலைய வழக்குகளில் வழக்குரைஞா்கள் சங்கம் ஒத்துழைக்கப் போவதில்லை என தீா்மானம் நிறைவேற்றி, வியாழக்கிழமை ஒத்துழையாமை போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து கமுதி வழக்குரைஞா் சங்கத்தை இழிவாகப் பேசிய ராமநாதன் மீது வெள்ளிக்கிழமை கமுதி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...