டிச. 27 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரத்தில் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 27 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 27 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கும்

வகையில் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவா்கள் மற்றும் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com