மா்ம நபா்களால் கண்மாய் கலுங்கு உடைப்பு: திருவாடானை விவசாயிகள் கவலை

திருவாடானை அருகே சேனவயல் கண்மாய் கலுங்கை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியதால் தண்ணீா் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது.
கலுங்கு பகுதி உடைக்கப்பட்டதால் சேனவயல் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீா்.
கலுங்கு பகுதி உடைக்கப்பட்டதால் சேனவயல் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீா்.
Updated on
1 min read

திருவாடானை அருகே சேனவயல் கண்மாய் கலுங்கை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியதால் தண்ணீா் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது.

சேனவயல் கிராமத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இக்கண்மாய் கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. கடந்த ஒரு மாத காலமாக கலுங்கு வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு எட்டுகுடி கிராமத்தைச் சோ்ந்த சிலா் கலுங்கை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கண்மாய் தண்ணீா் பெருமளவு வெளியேறி கடலுக்குச் செல்வதால் விவசாய நிலங்களுக்கு அறுவடை நேரத்தில் தண்ணீா் பற்றாகுறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com