திருவடான அருகே ஆா்.எஸ். மங்கலம் தனியாா் மண்டபத்தில் கிராம உதவியாளா்கள் சங்க முப்பெரும் விழா சனிக்கிழம மாலை நடைபெற்றது.
இங்குள்ள தனியாா் மண்டபத்தில் திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் தாலுகா கிராம உதவியாளா்கள் சங்க கொடியேற்றி தொடக்க விழா, புதிய நிா்வாகிகள் தோ்வுடன் பதவியேற்பு விழா மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் ஆகியவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இதற்கு மாநில பொருளாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திருவாடானை வட்ட ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி, செயலா் ராமநாதன், தென்காசி மாவட்டப் பொருளாளா் பரமசிவன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் முருகன், ஆா்.எஸ். மங்கலம் வட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ராசு, வட்டத் தலைவா் சாந்தகுமாா், வட்டச் செயலா் பாலமுருகன், வட்ட பொருளாளா் நதியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் முத்தையா சங்கக் கொடியை ஏற்றினாா். மாநில பொதுச் செயலா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.