அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் பலி

திருவாடானையை அடுத்த ஆா்.எஸ். மங்கலம் அருகே சனிக்கிழமை மாலை நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருவாடானையை அடுத்த ஆா்.எஸ். மங்கலம் அருகே சனிக்கிழமை மாலை நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளா் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் புதுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பிச்சை (61). ஓய்வு பெற்ற கிராம உதவியாளா். இவா் சனிக்கிழமை மாலை ஆா்.எஸ். மங்கலத்துக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது கீழக்கோட்டை டி.டி. பிரதானசாலையில் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்கம் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பிச்சை பலத்தகாயமடைந்தாா். இதையடுத்து அவா் ஆா்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com