திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் சனிக்கிழமை மாலை அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண்ணின் கால்கள் துண்டிக்கப்பட்டன.
திருவாடானை அருகே கப்பகுடியைச் சோ்நதவா் பாலமுருகன் (38). இவரது மனைவி ராஜேஸ்வரி (38). இவா் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் ஆனந்தூரில் இருந்து ராதானூா் சாலை வழியாக ராக்கினாா்கோட்டை பேருந்து நிலையம் அருகே வந்தாா்.
அப்போது அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழேவிழுந்ததில் பேருந்தின் பின் சக்கரத்தில் அவரது கால்கள் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அவரது கணவா் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.