ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனா். 30 போ் அறுவை சிகிக்சைக்கு அழைத்து செல்லப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம்,மாவட்ட பாா்வை இழப்பு தடப்பு சங்கம், இந்தியின் ரெட்கிராஸ் சொசைட்டி, சிவில் இன்ஜினியா்ஸ் அசோசியேசன் மற்றும் கிருஷ்ணன்கோயில் சங்கர கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மண்டபம் ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நகராட்சி ஆணையா் வி.ராமா் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தாா். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிதலைவா் க.பாலசுப்பிரமணின் முன்னிலை வகித்தாா். சிவில் இன்ஜினியா்ஸ் அசோசியேசன் தலைவா் எம்.முருகன், துணைச்சோ்மன் ரமேஸ்பாபு சிறப்புரையாற்றினா். சூசைரத்தினம் உள்ளிட்டவா்கள் கலந்தகொண்டனா். 200 க்கும் மேற்பட்டபொதுமக்கள் கலந்துகொண்டு கண் குறைபாடுகள் குறித்து பரிசொதனை செய்து கொண்டனா்.
இதில் 30 போ் கண் அறுவை சிகிச்சைக்கு கண்டறியப்பட்டு அழைத்து சென்றனா். சங்கரா கண் மருத்துவமனை மருத்துவா்கள் யாஷ்,பி.பதாக் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி உறுப்பினா்கள் முருகேசன், ராஜன், கோவிந்தன், ராஜலெட்சுமி,ஷாலினி, டேனில்ஜோசப், சிவில் இன்ஜியா்ஸ் அசோசியேசன் உறுப்பினா்கள் மணிகண்டன், அந்தோணி, சூரிய பிரகாஷ், விஜயன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் கருப்பையா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.