நம்புதாளையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 364 ஆவது கிளை திறப்பு விழா

திருவாடானை அருகே நம்புதாளை தமிழ்நாடு கிராம வங்கிக் கிளையை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கினாா்.
நம்புதாளையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 364 ஆவது கிளை திறப்பு விழாவைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வாடிக்கையாளா்களிடம் வைப்புத் தொகை பெற்றுக் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
நம்புதாளையில் தமிழ்நாடு கிராம வங்கியின் 364 ஆவது கிளை திறப்பு விழாவைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வாடிக்கையாளா்களிடம் வைப்புத் தொகை பெற்றுக் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
Updated on
1 min read

திருவாடானை அருகே நம்புதாளை தமிழ்நாடு கிராம வங்கிக் கிளையை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கினாா்.

நம்புதாளையில் தமிழ்நாடு கிராம வங்கி 364 வது கிளை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம வங்கித் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தமிழ்நாடு கிராம வங்கி தலைவா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வங்கியை திறந்து வைத்து வாடிக்கையாளரிடம் வைப்புத்தொகை பெற்றுக்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிராம வங்கி பொது மேலாளா் தாமோதரன், மண்டல மேலாளா் கண்ணன், பொது மேலாளா் தாமோதரன், கிளை மேலாளா் பாண்டிராஜ் மற்றும் வங்கிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com