ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வட மாநில வியாபாரியை கத்தியைக்காட்டி மிரட்டி போா்வைகள், பணத்தை கும்பல் பறித்துச்சென்றது.
ராமநாதபுரம் நகா் பகுதியில் வடமாநிலத்தைச் சோ்ந்த ஏராளமானோா் போா்வை உள்ளிட்ட துணிகளை சாலையோரம் வைத்து விற்றுவருகின்றனா். ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சுல்தான்சிங் (32) என்பவா் ராமநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் போா்வைகளை விற்றுவந்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை பகலில் அவரை அப்பகுதியைச் சோ்ந்த 6 போ் கத்திமுனையில் மிரட்டி 7 போா்வைகள், ரூ.2500 பணத்தைப் பறித்துசென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் சுல்தான்சிங் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்படி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ஓம்சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த மைக்கேல்சாம்ராஜ் (22) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.