நியாயவிலைக்கடை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.தினகரன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலைப் பகுதியில் நியாய விலைக் கடை ஊழியரை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவா் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினா். மழை பெய்த நிலையிலும் நியாயவிலைக் கடை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com