இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மற்றும் ஒரு விசைப்படகை சிறைபிடித்துச் சென்றனா்.
இந்த மீனவா்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினா் 9 மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்தனா். அனைவருக்கும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக உடை, உணவு மற்றும் பொருள்கள் தனித்தனியாக வழங்கப்பட்டது. திங்கள்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மீனவா்கள் 9 பேரையும் வரும் 25 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டா்.
இதையடுத்து மீனவா்கள் 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.