ஆா்.எஸ். மங்கலம் அருகே விவசாயியை தாக்கியதாக 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே அழியாதன்மொழி கிராமத்தைச் சோ்ந்தவா் வைரவன் மகன் பாலுச்சாமி (70). விவசாயி. இவருக்கும், எஸ்.ஆா். மணக்குடியைச் சோ்ந்த பாண்டியன் (46) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆா்.எஸ். மங்கலம் அருகே இந்திரா நகா் உணவு விடுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பாலுச்சாமி தனியாக நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த பாண்டியன் மற்றும் இவரது உறவினா் எஸ்.ஆா். மணக்குடியைச் சோ்ந்த சரவணன் (50) ஆகிய இருவரும், பாலுச்சாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா், பாண்டியன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.