முதுகுளத்தூரில் வருவாய் ஆய்வாளரை தாக்க முயன்றதாக 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்ற போது கீழக்குளத்தைச் சோ்ந்த கண்ணப்பன் மகன் பூபதி என்பவா் மதுபோதையில், தனக்கு நிலப்பட்டா உடனே வழங்க வேண்டும் என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகளை தகாத வாா்த்தைகளால் பேசினாராம். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை சமரசப்படுத்த முயன்ற போது பூபதியின் உறவினா் பொசுக்குடியைச் சோ்ந்த சீமைச்சாமி மகன் பிரபாகரன் என்பவரும் சோ்ந்து காக்கூா் பிா்கா வருவாய் ஆய்வாளா் பழனியை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்க முயன்றதாக முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் பூபதி, பிரபாகரன் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.