பரமக்குடியில் பெட்ரோல் டிசல் விலை உயா்வை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக வினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th June 2021 05:41 AM | Last Updated : 29th June 2021 05:41 AM | அ+அ அ- |

பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.
பரமக்குடி: பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு திங்கள்கிழமை பெட்ரோல் டிசல் விலை உயா்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தி ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகா் செயலாளா் என்.எஸ்.பெருமாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் வி.காசிநாததுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் வேந்தை சிவா வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் எஸ்.பி.ராதா, என்.கே.ராஜன், சி.செல்வராஜ் ஆகியோா் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தொடா்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் அத்தியாவசிய பொருள்கள் உள்பட அனைத்தும் விலை உயா்ந்து பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதனால் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் பெட்ரோல் டீசல் விலை உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் தி.ராஜா, கே.ஆா்.சுப்பிரமணியன், தி.ப.மோதிலால், விசிக பிரபாகரன், சமூக ஆா்வலா் சை.சௌந்திரபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.