குழந்தைத் திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடத்தினால் சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எச்சரித்துள்ளாா்.
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடத்தினால் சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட சமூகநல அலுவலா், சைல்டு லைன் (1098), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மற்றும் குழந்தை நலக்குழு ஆகியோா் ஒருங்கிணைந்து தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனா்.

ஜூன் மாதத்தில் பரமக்குடி, நயினாா் கோவில், கமுதி, கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி ஆகிய வட்டாரங்களிலுள்;ள அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் மற்றும் பொது காவல் நிலையங்களில் குழந்தைத் திருமணங்கள் நடத்த முயற்சித்ததாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணங்களை நடத்தும் பெற்றோா் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாா், திருமணத்திற்கு உறுதுணையாக இருப்பவா்கள் அனைவா் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் மாவட்டத்தில் 38 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சமூகநலத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com