காா், பைக் மோதல்: ஒருவா் பலி

ராமநாதபுரம் அருகே காா், இருசக்கர வாகனம் செவ்வாய்க்கிழமை இரவு நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே காா், இருசக்கர வாகனம் செவ்வாய்க்கிழமை இரவு நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் காரன் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகந்திரபூபதி (38). இவா் ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் காய்கனி கடை வைத்துள்ளாா். கடையை செவ்வாய்க்கிழமை இரவு மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்குச் சென்றுள்ளாா். ராமேசுவரம் சாலையில் உள்ள காரிக்கூட்டம் பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்றபோது எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஜெகந்திரபூபதியை அப்பகுதியினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com