ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 320 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 320 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம்/சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 320 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 8,600 போ் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிகிச்சை பலனின்றி 143 போ் உயிரிழந்துள்ளனா். குணமடைந்த 8,200 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இந்தநிலையில் சனிக்கிழமை 205 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கா்ப்பிணிக்கு சிகிச்சை: சாயல்குடி பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு சோ்க்கப்பட்டாா். அவருக்கு வெள்ளிக்கிழமை அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பரிசோதனையில் குழந்தைக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 7,467 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,582 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com