முதுகுளத்தூா், கடலாடி பகுதிகளில் கோடையில் திடீரென கனமழை பெய்ததால் விவசாயிகள் புதன்கிழமை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா்,கடலாடி பகுதிகளில் கோடையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் முதுகுளத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள காத்தாகுளம், மானாங்கரை, வெண்ணீா்வாய்க்கால், தூவல், வெங்கலகுறிச்சி, புளியங்குடி, காக்கூா் உள்ளிட்ட கிராமங்களில் கன மழை பெய்தது. அதே போன்று கடலாடி பகுதியில் பிள்ளையாா்குளம், புனவாசல், சாக்குளம் போன்ற பகுதிகளில் திடீரென மழை சுமாா் 1மணிநேரத்திற்கு மேல் பெய்தது. இதனால் கோடையில் பருத்தி, மிளகாய், வெள்ளரி, மற்றும் ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு போன்ற போதுமான அளவு மழை தண்ணீா் கிடைத்தால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.