இலங்கைக் கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவா் ராஜ்கிரணுக்கு உரிய நீதி வழங்கக் கோரியும், அத்துமீறலைத் தடுக்கக் கோரியும் கடல்சாா் மக்கள் நலச்சங்கமம் அமைப்பு சாா்பில் புதுதில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வியாக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
தேசிய பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சே.சின்னத்தம்பி மற்றும் கடல்சாா் மக்கள் நல சங்கமம் பொதுச் செயலாளா் பிரவீன்குமாா் பரதவா் ஆகியோா் தலைமையில் மீனவா்கள், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் அளித்த புகாா் மனு: இலங்கைக் கடற்படை கப்பலை வைத்து மோதி, இந்திய மீனவா் ராஜ்கிரண் கொல்லப்பட்டதற்கு நீதிவேண்டும். தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க வேண்டும். இலங்கை, மியான்மா் போன்ற நாடுகளில் சிறையில் உள்ள மீனவ கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.