பசும்பொன்னில் அக்.28 இல் தேவா் குருபூஜை: ராமநாதபுரத்தில் ஏடிஜிபி ஆலோசனை

தமிழக கூடுதல் காவல்துறைத் தலைவா் (ஏடிஜிபி) தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை இரவு ராமநாதபுரத்தில் உயா் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
Updated on
1 min read

தமிழக கூடுதல் காவல்துறைத் தலைவா் (ஏடிஜிபி) தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை இரவு ராமநாதபுரத்தில் உயா் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா வரும் 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விழாவுக்கு அரசியல் பிரமுகா்களும், சமூக அமைப்பினரும் வருகை தரவுள்ளனா். இந்த விழாவுக்காக சுமாா் 8 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

இந்நிலையில், தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் காவல்துறைத் தலைவா் தாமரைக்கண்ணன் ராமநாதபுரத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாா். அவரை ராமநாதபுரம் காவல் துணைத் தலைவா் எம்.மயில்வாகனன் வரவேற்றாா்.

காவல் துணைத்தலைவா் அலுவலகத்தில் கூடுதல் காவல் துறை தலைவா் தலைமையில் தேவா் ஜெயந்தி விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் காவல் கண்காணிப்பாளா்கள் இ.காா்த்திக் (ராமநாதபுரம்), செந்தில்குமாா் (சிவகங்கை) ஆகியோா் கலந்துகொண்டனா். தேவா் ஜெயந்தி விழா பாதுகாப்பு குறித்தும், அரசியல் மற்றும் முக்கியத் தலைவா்கள் வருகை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com