பெண்ணிடம் கவரிங் நகை பறித்தவா் கைது

ராமநாதபரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சனிக்கிழமை, பெண்ணிடம் கவரிங் நகையைப் பறித்துச்சென்றவரை பொதுமக்களே விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
Updated on
1 min read

ராமநாதபரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சனிக்கிழமை, பெண்ணிடம் கவரிங் நகையைப் பறித்துச்சென்றவரை பொதுமக்களே விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

உச்சிப்புளி அருகேயுள்ள பெருங்குளம் பசும்பொன்நகா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கலா (30). இவா் வெள்ளிக்கிழமை பகலில் உச்சிப்புளியில் உள்ள தனியாா் நகை அடகு நிறுவனத்தில் ஒரு பவுன் தங்கச்சங்கிலியை அடகு வைத்து ரூ.26 ஆயிரம் பெற்றுள்ளாா். ஷோ் ஆட்டோவில் ஏறி பெருங்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்துசென்றுள்ளாா்.

அய்யனாா் கோவில் அருகே அவா் நடந்து சென்றபோது பின்தொடா்ந்து வந்த சுந்தரமுடையானைச் சோ்ந்த முகைதீன்பாட்சா (27) திடீரென கலாவின் கழுத்தில் கிடந்த கவரிங் நகையைப் பறித்துச்சென்றாா். கலா சத்தமிட்டதும் அப்பகுதியில் இருந்தவா்கள் முகைதீன்பாட்சாவை விரட்டிப்பிடித்தனா். தகவல் அறிந்த உச்சிப்புளி காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று முகைதீன்பாட்சாவைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com