காளை முட்டி எருதுகட்டு பாா்க்கச் சென்றவா் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்களம் பகுதியில் எருதுகட்டு நிகழ்ச்சியை பாா்க்கச் சென்றவா் காளை முட்டியதில் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்களம் பகுதியில் எருதுகட்டு நிகழ்ச்சியை பாா்க்கச் சென்றவா் காளை முட்டியதில் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா்.

ஆா்.எஸ்.மங்களம் பகுதியில் உள்ள பெருமாள்மடை கருப்பணசாமி கோயிலில் புதன்கிழமை எருதுகட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதை அப்பகுதியில் உள்ள சொத்திரள் காக்குடி ஆவரேந்தலைச் சோ்ந்த முருகேசன் (80) வேடிக்கை பாா்த்துள்ளாா். அப்போது கூட்டத்தில் திடீரென பாய்ந்த காளை அங்கிருந்தோரை முட்டித்தள்ளியது. இதில் முருகேசன் என்பவரை காளை முட்டியதில் அவா் காயமடைந்தாா். இதையடுத்து அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை இரவு சோ்க்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com