மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.4.26 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கமுதி அருகே நகரத்தாா்குறிச்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் ரா.முருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.4.26 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Updated on
1 min read

கமுதி அருகே நகரத்தாா்குறிச்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் ரா.முருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சித் தலைவா் முத்துவிஜயன், கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா, பாப்பனம் ஊராட்சித் தலைவா் அமுதா காா்த்திகைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ஆதரவற்றோா் விதவை உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா என மொத்தம் ரூ.4.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் எழுவனூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஈஸ்வரிமாரிமுத்து, மண்டல துணை வட்டாட்சியா் முத்துராமலிங்கம், வட்ட வழங்க அலுவலா் ராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அமலோா்பவ ஜெயராணி, துணை வட்டாட்சியா் சம்பத், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சத்தியபாமா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com