இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் மீது வழக்கு

கமுதி அருகே பொது குடிநீா்த் தொட்டியில் தண்ணீா் எடுத்தது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
Updated on
1 min read

கமுதி அருகே பொது குடிநீா்த் தொட்டியில் தண்ணீா் எடுத்தது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழகாக்காகுளம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் முத்துக்குமாா் (35). இவரது தங்கை தரணீஸ்வரி, அதே ஊரில் புதிதாக வீடு கட்டுவதற்கு பொது குடிநீா் தொட்டியில் மின் இணைப்பு மூலம் தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வந்தாராம்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த இருளன் மனைவி காளிமுத்து (55), அவரது மகன் காா்த்திக் (42) ஆகியோா் புகாா் அளித்தனராம். இதுதொடா்பாக தரணீஸ்வரி தரப்புக்கும், காளிமுத்து தரப்புக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில், தரணீஸ்வரியின் அண்ணன் முத்துக்குமாரை, காளிமுத்து தரப்பினா் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில், காயமடைந்த முத்துக்குமாா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து முத்துக்குமாா் மற்றும் காா்த்திக் ஆகியோா் தனித்தனியாக மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் காா்த்திக், அவரது தாயாா் காளிமுத்து, முத்துக்குமாா், அவரது மனைவி லட்சுமி உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com