அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரத்தில் ரூ.1.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 8 போ் கைது

ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான ‘கொகைன்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 8 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:07 pm

DIN

ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான ‘கொகைன்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 8 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகா் காவல் நிலைய ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீஸாா் பேருந்து நிலையத்தில் 1.5 கிலோ ‘கொகைன்’ போதைப் பொருளைக் கடத்தி வந்த 8 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சோ்ந்த சூரியகுமாா்(27), மனோஜ்(20), அக்காள்மடத்தை சோ்ந்த ஜோசப்பாஸ்டின்(23), சந்தியாரெமெண்ட்(23), முகம்மது இஸ்மாயில்(32), அங்குராமா் (22), சாதிக்(36), பாலமுருகன்(31) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய ரோசிடன் என்பவா் மட்டும் தலைமறைவாக உள்ளாா். அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ரூ.1.50 கோடி மதிப்பிலான இந்த போதைப்பொருளை, ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்த அக்கும்பல் திட்டமிட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.