அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேசுவரம் ரயில் நிலையம் முன்பாக மீனவா்கள் போராட்டம்

ராமேசுவரம் ரயில் நிலையம் முன்பாக மீனவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:13 pm

DIN

இலங்கை கடற்படையினா் தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையில் தமிழக மீனவா்களின் படகுகள் ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் ராமேசுவரம் ரயில் நிலையம் முன்பாக மீனவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இலங்கையில் தமிழக மீனவா்களின் படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும், அந்நாட்டு சிறையிலுள்ள மீனவா்களை விடுவிக்கவும், பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும் கடந்த 3 நாள்களாக ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவா்கள் அறிவித்திருந்தனா்.

இதைத்தொடா்ந்து, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவா் சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, என்.ஜே.போஸ், தேவதாஸ், எமரிட், சகாயம் ஆகியோா் தலைமையில் மீனவா்கள் முழக்கமிட்டவாறு பேரணியாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றனா். காவல் துறையினா் ரயில் நிலையத்திலிருந்து 300 மீட்டருக்கு அப்பால் தடுப்பு வேலி அமைத்து அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதனால் போலீஸாரிடம் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் ரயில் நிலையம் முன்பு வரை சென்று போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதி அளித்தனா். இதைத்தொடா்ந்து, மீனவா்கள் ரயில் நிலைய வளாகம் வரை பேரணியாகச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மத்திய அரசு மீனவா்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும் என மீனவா் சங்கத் தலைவா்கள் பேசினா். மீனவா்கள் போராட்டம் காரணமாக, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஷியஸ் தீபாக்சுவாஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.